விழா

‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் இந்தியப் புத்தாண்டைக் கொண்டாட நடத்திவரும் வருடாந்திர இந்திய கலாசாரத் திருவிழா நிகழ்ச்சி, இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
பருவங்கள் மாறி மாறி வருகையில் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கி மறுபடியும் அவ்விடத்தையே அடைகிறது என்பதைக் கண்கூடாக அறிய முடிகிறது. தொடக்கமென்பது ஒரு மறுமலர்ச்சியை, புத்துணர்வை, மகிழ்ச்சியைக் கொடுக்ககூடியதாக அமைவதையே மனம் விரும்புகிறது. குளிர்காலம் முடிந்து, தாவரங்கள் துளிர்க்கும் காலம், மலர்கள் பூக்கும் காலம், ஆதவனின் கதிர்கள் பூமிக்கு இதமான வெப்பத்தைப் பரப்பும் காலம் இளவேனிற்காலம். அதுவே தொடக்கமெனப் பல்லாண்டு காலமாய் மனத்தில் தோன்ற சித்திரையே முதல் மாதமானது. நம் கலாசாரத்திற்குத் தெரிந்தது இம்மாதங்கள்தாம். இதனைத் தவிர்த்து, ராசிகளின் அடிப்படையில் மாத வரிசைகள் அமைவதும் உண்டு. அவையும் சித்திரை மாதத்தில்தான் தொடங்குகின்றன. 
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), சமூகப் பங்காளிகளுடன் இணைந்து சனிக்கிழமை (மார்ச் 23), வசதி குறைந்த 600 குடும்பங்களுக்கு விழாக்கால அன்பளிப்புப் பைகளை வழங்கியது.
லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல நகை விற்பனைக் கடையான ‘ஜோயாலுக்காஸ்’ கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று, பெரும் நகை விற்பனைச் சலுகையை அறிமுகம் செய்தது.
கம்போங் கிளாமில் இவ்வாண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆகப் பெரிய, பல நாள் நோன்புப் பெருநாள் சந்தை அமைக்கப்பட இருக்கிறது.